அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால்  கைது

பாறுக் ஷிஹான்
வெற்றிலைக்கேணி  கடற்பகுதியில்  அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள்  8 பேர்  இலங்கை கடற்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் இன்று(5) அதிகாலையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த   கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதன் போது இம்மீனவர்கள் வசம் இருந்த படகுஇவலைகள் இமீன்கள் உள்ளிட்டவைகள் மீட்கப்பட்டு  காங்கேசந்துறை துறைமுகத்திற்கு கடற்படையினரால் எடுத்து வரப்பட்டன.
மேலும் கைது செய்யப்பட்ட 8 மினவர்களையும்   நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.