இரா.சம்பந்தன், சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை

  யாழ். இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற தேசிய தமிழ்த் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாச்சார விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எவரும் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.யாழ். இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற தேசிய தமிழ்த் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாச்சார விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எவரும் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

  ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் பொதுமக்கள் கறுப்பு கொடி தாங்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.

 

 இந்த நிகழ்விற்கு, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் இதனை புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். மாவட்டத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த நிகழ்வினை புறக்கணிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.