பழகிக் கழித்த தோழர்களே பதவி இழந்தோமே நாம் பதவி இழந்தோமே

பசுமை நிறைந்த நினைவுகளே…
பாடித் திரிந்த பறவைகளே…!
———————————————

பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே
பதவி இழந்தோமே நாம்
பதவி இழந்தோமே!
————
குரங்குகள் போலே சபைதனில் மேலே
தாவித் திரிந்தோமே
குள்ளர்களாக இருந்து கொண்டே
குழிபறித்தோமே நமக்குள்
குழிபறித்தோமே!
————
வரவில்லாமல் செலவுகள் செய்து
மகிழ்ந்திருந்தோமே
வந்த பணத்தை சொந்தப் பணமாய்
செலவு செய்தோமே
நாமே செலவு செய்தோமே!
————
எந்த ஊரில் எந்த எந்தத் தெருவில்
எதனைச் செய்தோமோ?
எந்த அழகில் எந்த முகத்தில்
எவரை விழிப்போமோ?
அந்த நாளை இந்த நாளில்
மறந்து போனோமே!
இல்லம் கண்டு பள்ளி கொண்டு
உறங்கி நிற்போமே
என்றும் ஒழிந்து நிற்போமே

– ஏ.எச்.சித்தீக் காரியப்பர்