உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திரவின் மனைவி மீண்டும் பொலிஸ் சேவையில் இணைவு

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதுகாப்பு வழங்கும் போது உயிரிழந்த பொலிஸ் சர்ஜன்ட் சரத் ஹேமச்சந்திரவின் மனைவி மீண்டும் பொலிஸ் சேவையில் இணைவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கைக்கமைய ஆணைக்குழு இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக அதன் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பொலிஸ் சர்ஜன்டின் மனைவி கான்ஸ்டபிலாக சேவை செய்துள்ள நிலையில் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக பொலிஸ் சேவையில் இருந்து விலகியுள்ளார்.

எப்படியிருப்பினும் தனது கணவர் உயிரிழந்த பின்னர் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு தன்னை மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்து கொள்ளுமாறு அவர் பொலிஸ் திணைக்களத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

 நீதிபதி இளஞ்செழியனுக்கு 15 வருடமாக மெய்ப்பாதுகாவலராக பணியாற்றிய சரத் ஹேமச்சந்திர உயிரிழந்ததுடன் மற்றொரு அதிகாரி காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.