உள்நாட்டு இறைவரி சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானது – சபாநாயகர்

உள்நாட்டு இறைவரி சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானதாக இருக்கின்றது என்று உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார். 

இன்று காலை சபாநாயகரால் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால் விஷேட பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

அவ்வாறில்லாவிட்டால் அந்த சட்டமூலம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.