அரிசி, சீனி உள்­ளிட்ட 47 வகை­யான அத்தியாவசிய பொருட்­க­ளுக்கு வரி­வி­லக்கு அளிக்க தீர்­மா­னம்

அரிசி, சீனி, உரு­ளைக்­கி­ழங்கு, பெரி­ய ­வெங்­காயம் உள்­ளிட்ட 47 வகை­யான அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளுக்கு அர­சாங்கம் வரி­வி­லக்கு அளிக்க தீர்­மா­னித்துள்ளது.

பொது­மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கு­வ­தற்­காக நேற்று நடை­பெற்ற வாழ்க்கை செலவு தொடர்­பாக அமைச்­ச­ரவை உப­கு­ழு­வினால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள தீர்­மா­னங்­க­ளி­ன­டிப்­ப­டை­யி­லேயே குறித்த தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

மேலும் தற்­போது நாட்டில் பல மாவட்­டங்­களில் நிலவும் வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டுள்ள பொது­மக்­க­ளுக்கு நிவா­ர­ண­ம­ளிப்­ப­தற்­கென ஜனா­தி­ப­தி­யினால் வழங்­கப்­பட்ட ஆலோ­ச­னைக்­க­மை­வாக எதிர்­வரும் 2 மாதங்­க­ளுக்கு 5 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான அத்­தி­யா­வ­சிய உண­வுப்­பொ­தி­யொன்றை வழங்­கு­வ­தற்கும் அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது என்று நிதி மற்றும் ஊட­கத்­துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்ளார்.

இதன்­படி வரி­வி­லக்கு விதிக்­கப்­பட்­டுள்ள பொருட்­களின் விபரம் வரு­மாறு,

இறக்­கு­மதி செய்­யப்­படும் ஒரு கிலோ அரி­சிக்­கான விசேட வர்த்­தக  வரி 25 சத­வீதம் வரை­யிலும் குறைக்­கப்­பட்டு ஐந்து ரூபா விலைக்­கு­றைக்­கப்­பட்­டுள்­ளது. ஒரு கிலோ அரி­சிக்­கான குறித்த 25 சத­வீத புதிய வரி­வி­லக்கு 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும்.

மேலும் இறக்­கு­மதி செய்­யப்­பட்ட பதப்­ப­டுத்­தப்­பட்ட மீனுக்­கான விசேட வர்த்தக் வரி ரூபா 50 இனால் குறைக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­க­மை­வாக இறக்­கு­மதி செய்­யப்­படும் மீன்­வ­கை­களில் தலபத் மற்றும் கொப்­பறா ஆகிய மீன்கள் 1 கிலோ­விற்­காக இது­வ­ரை­யி­லி­ருந்த 75 ரூபா விசேட வர்த்­தக பொருட்கள் வரி 25 ரூபா­வாக குறைக்­கப்­ப­டு­கின்­றது. குறித்த விலைக்­கு­றைப்பு கடற்­றொழில் அமைச்சின் கோரிக்­கைக்கு அமை­வாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் குறித்த மீனுக்­கான புதிய விலைக்­கு­றைப்பு எதிர்­வரும் 3 மாதங்­க­ளுக்கு செல்­லு­ப­டி­யா­ன­தாகும்.

மேலும் கோழி உணவு தயா­ரிப்­பிற்­காக பயன்­ப­டுத்­தப்­படும் சோளத்­திற்­கான இறக்­கு­மதி வரி அனைத்தும் நீக்­கப்­பட்டு ஒரு கிலோ சோளத்­திற்கு புதிய விசேட வர்த்­தக வரி 10 ரூபா அமு­லுக்கு வரு­கின்­றது. இது­வ­ரையில் சோளத்­திற்­காக 15 சத­வீத இறக்­கு­மதி வரியும் 15 சத­வீத வற் வரியும் 7.5 சத­வீத துறை­முக மற்றும் விமா­ன­நி­லைய வரியும் 2 சத­வீத தேசத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான வரியும் 35 சத­வீத செஸ் வரியும் அற­வி­டப்­பட்­டது.

குறித்த அனைத்து வரி­க­ளையும் ஒன்று சேர்க்கும் போது இறக்­கு­மதி செய்­யப்­படும் சோளம் 1 கிலோ­விற்­காக இது­வ­ரையில் ரூபா 60 தொடக்கம் 70 வரை­யி­லான தொகை வரி­யாக செலுத்­த­வேண்டி ஏற்­பட்­டி­ருந்­தது. எதிர்­வரும் 6 மாத­கா­லப்­ப­கு­திக்கு குறித்த அனைத்து வரி­களும் நீக்­கப்­பட்­டுள்­ள­துடன் எதிர்­கா­லத்தில் சோளத்­திற்­காக ரூபா 10 விசேட வர்த்­தக பொருட்கள் வரி மாத்­திரம் அற­வி­டப்­படும்.

மேலும் இறக்­கு­மதி செய்­யப்­படும் ஒரு கிலோ மாவிற்­கான செஸ்­வரி ரூபா 25 இலி­ருந்து 15 ரூபா வரையில் ரூபா 10 இனால் குறைக்­கப்­பட்­டுள்­ளது. இதே­போன்று கோதுமைத் தானியம் மீது விதிக்­கப்­பட்­டி­ருந்த வரி ஒரு கிலோ­விற்கு 9 ரூபா­வி­லி­ருந்து 6 ரூபா வரையில் அதா­வது 3 ரூபா குறைக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­க­மை­வாக இறக்­கு­மதி வரி மற்றும் விசேட வர்த்­தக பொருட்கள் வரி குறைக்­கப்­பட்­டுள்ள அனைத்து அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலை­களும் எதிர்­வரும் தினங்­களில் குறை­வ­டையும்.

மேலும் நுகர்­வோ­ரான பொது­மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கு­வ­தற்­காக அரிசி ,சீனி, கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட 47 அத்தியாவசிய பொருட்களுக்கான பல்வேறு வரிகள் நீக்கப்பட்டு இவற்றிற்காக விசேட வர்த்தக பொருட்கள் வரி அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்த விவசாய உற்பத்தி பொருட்கள் சந்தைக்கு வரும் சந்தர்ப்பத்தில் விவசாயிகளை பாதுகாப்பதற்காக இந்த வர்த்தக பொருட்கள் வரி அந்தந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தினால் அதிகரிக்கப்படும்.