அமைச்சர் ரவியிடம் பிணை முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை

அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கவுள்ளார். 

முன்னதாக, கடந்த 24ம் திகதி அவரை வாக்குமூலம் அளிக்க வருமாறு தெரியப்படுத்தப்பட்டது. 

எனினும் அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகாத நிலையில், மீண்டும் 26ம் திகதி வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. 

இதனையடுத்து, தனது சட்டத்தரணி ஊடாக, தன்னால் புதன்கிழமையே (இன்று) ஆணைக்குழுவுக்கு வருகை தர முடியும் எனக் கூறியிருந்தார். 

இதற்கமைய, அவர் இன்று மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகவுள்ளதாக தெரியவந்துள்ளது.