ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்­வந்து வேட்பு மனு வழங்­கி­னாலும் மஹிந்த எற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை: ஜீ.எல்.பீரிஸ்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ இனி­வரும் தேர்­தல்­களில் ஸ்ரீலங்கா சதந்­திரக் கட்சி சார்­பாக போட்­டி­யி­டப்­போ­வ­தில்லை.

ஏனெனில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஸ்தாப­கர்கள் எக்­கொள்­கை­யினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அக்­கட்­சியை ஆரம்­பித்­தார்­களோ அக்­கொள்­கைக்கு புறம்­பாக அக்­கட்சி தற்­போது செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது.

ஆகவே, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி முன்­வந்து முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவிற்கு தேர்­தல்­களில் போட்­டி­யி­டு­வ­தற்கு வேட்பு மனு வழங்­கி­னாலும் அதனை அவர் எற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை என முன்னாள் அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்தார்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­யாளர் சந்­திப்பு நேற்று கொழும்­பி­லுள்ள ஸ்ரீவ­ஜி­ரா­ஷ்ரம பெளத்த நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தற்­போது தனது தனித்­து­வத்தை இழந்து செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது. அக்­கட்சி ஐக்­கிய தேசியக் கட்­சியின் நிகழ்ச்சி நிர­லுக்கு ஏற்ப செயற்­ப­டு­கி­றது. ஆகவே அக்­கட்சி பெய­ர­ளவில் மாத்­திரம் உள்­ளது.

மேலும் நாட்டில்  தற்­போது எப்­போ­து­மில்­ல­ாத­வாறு மக்கள் நெருக்­க­டி­களைச் சந்­தித்து வரு­கின்­றனர். ஆன­போ­திலும் அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தி தீர்வு முன்­வைப்­ப­தற்கு நல்­லாட்சி அர­சாங்­கத்தால் முடி­யா­துள்­ளது. டெங்கு, சைட்டம் உள்­ளிட்ட பிரச்­சி­னைகள் தொடர்ந்து­கொண்­டி­ருக்­கின்­றன. ஒவ்­வொ­ரு­நாளும் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் நடை­பெ­று­கின்­றன.

எனினும் அதற்கு தீர்வை முன்­வைப்­ப­தற்குப் பதி­லாக அந்த ஜன­நா­யகச்  செயற்­பா­டு­களை அர­சாங்கம் முடக்­கு­கின்­றது.

மக்கள் கஷ்­டப்­ப­டு­கின்றபோதிலும் ஆட்­சி­யா­ளர்கள் மாத்­திரம் உல்­லா­ச­மாக வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றனர். அமைச்­சர்­களின் வாகனம் மற்றும் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லங்­களை மறு­சீ­ர­மைப்­ப­தற்கு கடந்த வாரம் 140 மில்­லியன் ரூபா  ஒதுக்­கீ­டு­செய்­யப்­பட்­டுள்­ளது.

எனினும் இவ்­வா­றான பிரச்­சி­னை­களை மக்கள் மத்தியில் மேலோங்கச் செய்து அதன்பால் மக்களின் கவனத்தை திருப்பிவிட்டு அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாட்டுக்குப் பாதகமான சட்டமூலங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.