புதிய அர­சி­ய­ல­மைப்பில் தேர்தல் முறை மாற்­றத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும் : ஜனாதிபதி

புதிய அர­சி­ய­ல­மைப்பில் தேர்தல் முறைமை மாற்­றப்­பட வேண்டும் என  மக்கள் எதிர்­பார்­கின்­றனர். எனவே புதிய அர­சி­ய­ல­மைப்பில் தேர்தல் முறை மாற்­றத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.   

தெஹி­அத்த கண்­டிய மகா­வலி  சாலிகா மண்­ட­பத்தில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.  

அவர்  அங்கு மேலும் தெரி­விக்­கையில்,

புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை உரு­வாக்­கு­வ­தற்­காக பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய  சபை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. அதில் பல உப குழுக்­களும் உள்­ளன. அவர்கள் தற்­போதும் புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான  அறிக்­கை­களை தயா­ரிக்கும் பணி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றார்கள்.

 அந்த குழுக்­களின் அறிக்­கை­களை தொகுத்து அர­சாங்கம் தனி­யான ஒரு அறிக்­கையை தயார் செய்யும். அதன் பின்னர் அந்த அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும். அதன் பின்னர் அதற்கு ஆத­ரவு,எதிர்ப்பு, திருத்­தங்கள் மற்றும் பரிந்­து­ரைகள் உள்­ளிட்ட விட­யங்கள் குறித்து பேசப்­படும்.

அதன் பின்­னர்தான் புதிய அர­சி­ய­ல­மைப்பின் மொத்த வடிவம் தயார் செய்­யப்­படும். அதனால் என்­னி­டத்­திலோ அல்­லது அர­சாங்­கத்தில் உள்­ள­வர்­க­ளி­டத்­திலோ தற்­போது வரையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பி­லான ஒரு வித­மான பத்­தி­ரங்­களும் இல்லை.

அவ்­வாறு உரு­வாக்­கப்­படும் புதிய அர­சி­ய­ல­மைப்பில்  ஒற்­றை­யாட்­சியில் எந்­த­வித மாற்­றமும் ஏற்­ப­டுத்­தப்­ப­டாது. பெளத்த மதத்தின் முன்­னு­ரி­மைக்கும் எது­வித பங்­கமும் ஏற்­ப­டுத்­தப்­ப­டாது. குறிப்­பாக பெளத்த மதம் தொடர்­பி­லான அத்­தி­யா­யங்­களை மாற்றம் செய்­ய­மாட்டோம்.

எவ்­வா­றா­யினும் அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் தொடர்பில் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கும் மக்­க­ளுக்கும் எதிர்­பார்ப்­புக்கள் உள்ளன. மக்கள் தமது ஒவ்வொரு தொகுதிக்கும் தனியான பிரதிநிதிகள் தேவைப்படுகின்றனர் என கருதுகின்றார்கள். 

 எனவே புதிய அரசியலமைப்பில் புதிய தேர்தல் முறைக்கு முன்னுரிமை கொடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.