புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான பிரச்சினைகளை மக்களிடம் முன்வைக்க வேண்டும்: சுமந்திரன்

சர்வஜன வாக்கெடுப்புக்கு சென்று புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான பிரச்சினைகளை மக்களிடம் முன்வைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றத்தில் இந்த யோசனையை முன்வைத்தார்.

அரசாங்கம் புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான யோசனைகள் குறித்து சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் எனவும், அப்போது மக்கள் தமது நிலைப்பாட்டை தெரிவிக்க முடியும் எனவும் சுமந்திரன் கூறியுள்ளார்.