மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் : மஹிந்த சமரசிங்க

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன மற்றும் அவரது குடும்பத்தினரின்  உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. ஜனாதிபதி வெளிப்படையாக இதனை எம்மிடம் தெரிவித்துள்ளார். எனவே அரசாங்கம் என்ற வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.