வடகொரியாவுக்கு அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை !!

பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரிகளின் இலக்கை குறிவைத்து அழிக்கும் ஏவுகணை மற்றும் ராக்கெட் எஞ்சின்களை சோதனை செய்யும் வடகொரியா, சமீபத்தில் புதிய ஏவுகணை ஒன்றை சோதனை செய்தது.

வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள பாங்யான் என்ற இடத்திலிருந்து சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடிய ஏவுகணையை வடகொரியா பரிசோதித்தது. இந்த சோதனையை அந்நாட்டு அதிபர் கிம் ஜான் உன் நேரில் பார்வையிட்டதோடு, அமெரிக்கர்களுக்கு சுதந்திர தின பரிசு என தெரிவித்திருந்தார்.

வடகொரிய அதிபரின் இந்த பேச்சு வெள்ளை மாளிகையை கொதிப்படைய வைத்துள்ளது. இதனையடுத்து, மேற்கொண்டு என்ன செய்வது? என்ன அதிபர் டிரம்ப் ஆலோசணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், வட கொரியாவின் ஏவுகனைச் சோதனையானது ராணுவ விரிவாக்கத்துக்கான செயல் என விமர்சித்துள்ள ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே, வட கொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்த திட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளதாகவும் கூறியுள்ளார். தேவைப்பட்டால் ராணுவத்தை பயன்படுத்தி தீர்வு காணவும் தயாராக உள்ளதாகவும் கடுமையாக எச்சரித்துள்ளார்.

மேலும், வடகொரியாவுக்கு ஆதரவாக இருக்கும் ரஷ்யா மற்றும் சீனாவை கடுமையாக சாடியுள்ள நிக்கி ஹாலே, ஐ.நா விதித்த பொருளாதார தடைகளின் படி ரஷ்யாவும், சீனாவும் வெடகொரியாவுடன் வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.