வவுனியாவில் தொழில் முயற்சி இனங்காணலும் ஊக்கமூட்டலுக்குமான விழிப்புணர்வுச் செயலமர்வு

 

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைவாக, வவுனியா மாவட்டத்தில் தொழில் முயற்சியாளர்களின் நலன் கருதி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களை ஒருங்கிணைத்து வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் நடைபெறும் தொழில் முயற்சி இனங்காணலும் ஊக்கமூட்டலுக்குமான விழிப்புணர்வுச் செயலமர்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (28) பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன், ஜயதிலக்க மற்றும்  பிரதேச செயலாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.