அனர்த்தம் காரணமாக தொற்று நோய்கள் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க பிரதமர் அறிவுறுத்தல்

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக நோய்கள் தொற்றுவதில் இருந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். 

மத்திய சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார அமைச்சுக்கள் இதனை நோய்கள் தொற்றுவதை தடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

நாட்டில் ஏற்பட்டுள்ள இடர் நிலமை குறித்து இன்று காலை அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைக் கூறியுள்ளார். 

அதேவேளை இரத்தினபுரி போன்ற சில பிரதேசங்களில் இவ்வாறு அனர்த்தம் ஏற்படும் என்பது குறித்த முன்னறிவித்தல் எதுவும் விடுக்கப்படவில்லை என்று கூறிய பிரதமர், முன்னறிவித்தல் விடுத்திருந்தால் சில பிரதேசங்களில் எற்பட்ட பாதிப்புக்களை தடுத்திருக்க முடியும் என்று தெரிவித்தார். 

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது, ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து மதிப்பிடுதல் போன்ற குறுகிய காலத்தில் செய்ய வேண்டிய தேவைகள் இருப்பதாகவும் கூறினார். 

இந்த அரசாங்கம் முடிந்தளவு அவசரமாக இந்த நிலமைக்கு முகங்கொடுத்து இந்த சவாலில் இருந்து வெற்றியடையும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.