அரவிந்த டி சில்வா தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யத் தீர்மானம்…?

இலங்கை கிரிக்கட் குழுவின் தலைவர் பதவியிலிருந்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார்.

இந்நிலையில் இராஜினாமா கடிதத்தை அரவிந்த டி சில்வா, இலங்கை கிரிக்கட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாக கிரிக்கெட் நிறுவன அதிகாரியொருவர் தெரிவித்தார். 

இதேவேளை, அரவிந்த டி சில்வாவின் பதவி விலகல் தொடர்பான கடிதத்தை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதுவரை தீர்மானிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

தனிப்பட்ட காரணங்களுக்காவே அரவிந்த டி சில்வா பதவியிலிருந்து விலகுவதற்காக தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.