திலகரட்ன டில்ஷான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்…

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான திலகரட்ன டில்ஷான் நீதிமன்றில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் டில்ஷான் நீதிமன்றில் சரணடைவதற்காக தற்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டில்ஷான் அவருடைய சட்டத்தரணியின் மூலம் இன்று மனு ஒன்றினை தாக்கல் செய்து நீதிமன்றில் சரணடைவதற்காக முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது