மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிவையடுத்து நோய்கள் பரவும் அபாயம்..

மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிவையடுத்து பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் சுகாதார நெருக்கடிகள் ஏற்படுதைத் தடுக்க தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுக்குமாறு அமைச்சர் ராஜித சேனாரட்ன சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். குறித்த பிரதேசத்தில் டெங்கு, இன்புளுவென்சா நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். 

மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிவையடுத்து சுகாதார அமைச்சு மேற்கொண்டு வரும் நகர்வுகள் தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.