மே தினக் கூட்டம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பலத்தை மீண்டும் உறுதிப்படுத்தும்: எஸ்.பி.திசாநாயக

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து செயற்பட தயாரில்லாத நபர்களை நிராகரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தனித்த பயணத்தை ஆரம்பிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயார் என அமைச்சர் எஸ்.பி.திசாநாயக தெரிவித்தார். இம்முறை மே தினக் கூட்டம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பலத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

கண்டியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.