குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்தியாவின் ஷ்யாம் குமார் தங்கம் வென்றார்

உலகின் முன்னணி குத்துச்சண்டை தொடரான தாய்லாந்து குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி பட்டாயா நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற தேசிய எலைட் சாம்பியன்ஸ்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற இந்தியாவின் ஷ்யாம் குமார் உள்ளிட்ட 7 வீரர்கள் இந்தத் தொடரில் கலந்து கொண்டார்.

49 கிலோ எடைப் பிரிவினருக்கான இன்றைய போட்டியில் 19 வயதான ஷ்யாம் குமார், முன்னணி உஸ்பெகிஸ்தான் வீரரான ஹசன்பாய் டஸ்மாடோவ்-வை எதிர்கொண்டார். ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே டஸ்மோவ் காயம் காரணமாக விலகினார்.

இதனையடுத்து ஷ்யாம் குமார் தங்கப்பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக 4 இந்திய வீரர்கள் தொடக்க போட்டிகளிலேயே தோல்வியடைந்து வெளியேறினர்.