ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னாள் உள்ள பாதை ஒருபோதும் திறக்கப்பட மாட்டாது – லக்ஷ்மன் கிரியெல்ல

ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னாள் உள்ள பாதை ஒருபோதும் திறக்கப்பட மாட்டாது என சபை முதல்வரும் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தலதா மாளிகைக்கு முன்னால் உள்ள பாதை திறக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில் நல்லாட்சி அரசாங்கமானது எத்தனை வருடங்கள் சென்றாலும் ஆட்சியில் இருக்கும் வரை குறித்த பாதை திறக்கப்பட மாட்டாது.

அந்த வகையில் இந்த பாதை மூடப்பட்டுள்ளமை தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கு உறுதியுடன் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.