பிரித்தானியாவில் பாரிய வெடி விபத்தால் 15 பேர் காயம் , ஒருவர் ஆபத்தான நிலையில்….

 

பிரித்தானியாவில் பாரிய வெடி விபத்தால் 15 பேர் காயமடைந்திருப்பதாகவும், ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவின் நியூபெர்ரி பகுதியில் உள்ள கட்டிடத்தில் அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த விபத்து வாயு விபத்தால் தான் ஏற்பட்டதா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து இன்னும் சரிவர தெரியவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்திருப்பதாகவும், ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.