எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் விடுதலை

பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் இன்று (24) ஆம் திகதி விடுவிக்கப்பட்டுள்ளார். 

´அராபி வசந்தம்´ எனப் பெயரிடப்பட்ட 2011 ஆம் ஆண்டு மக்கள் எழுச்சியின் பின்னர் ஆட்சி கவிழ்க்கப்பட்ட ஹொஸ்னி முபாரக் கடந்த சில வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 

சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் கய்ரோ ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.