காசல்ரீ நீர்தேக்கத்தில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது..

க.கிஷாந்தன்

காசல்ரீ நீர்தேக்கத்தில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமர்வில் பகுதியின் நீர்தேக்க கரையோரத்திலே 24.03.2017 அன்று காலை 11 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

நீர்தேக்கத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், சடலமொன்று மிதப்பதைக்கண்டு அட்டன் பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். 

சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்றும் சுமார் 35ற்கும் 40ற்கும் இடையிலான வயது மதிக்கதக்கவர் எனவும் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

விசாரணையின் பின் சடலம் பிரேத பரிசோதணைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.