SLMC யில் இருந்து என்னையும் கிழக்கு மக்களையும் வெளியேற்றும் அருகதை யாருக்கும் இல்லை : ஹசன் அலி

(எம்.சி.நஜிமுதீன்)

வட கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகமெனின் அங்கு முஸ்லிம்களுக்கு கரையோர மாவட்டம் உறுதிசெய்யப்பட வேண்டும். அக்கோரிக்கையில் உறுதியாக உள்ளேன். மேலும் தலைமை என்னை சூழ்ச்சி மூலம் செயலாளர் பதவியிலிருந்து நீக்கினாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து என்னையும் கிழக்கு மக்களையும் வெளியேற்றும் அருகதை யாருக்கும் இல்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸனலி தெரிவித்தார்.  

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சம்பந்தமாக அவரது நிலைப்பாடு தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.