பசில் ராஜபக்ஷவுக்கெதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக, கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மல்வானை பகுதியிலுள்ள 16 ஏக்கர் நிலத்தை கொள்வனவு செய்தமை தொடர்பில், பணச்சலவை சட்டத்தின் கீழேயே, இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.