மரத்தின் வேர்களுக்கு விளம்பல்….

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

 

(வீடியோ).,ஹசன் அலியின் நிந்தவூர் கூட்டத்திற்கு கிழக்கு மாகாண மக்களை அணி திரளுமாறு நாபீர் பெளண்டேசன் அறைகூவல்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினுடைய ஆரம்ப கால போராளியும், ஆரம்ப கால இஸ்தாபக உறுப்பினர், அன்று தொட்டு இன்று வரைக்கும் தனது வாழ் நாள்களை தியாகம் செய்துள்ள கட்சியினுடைய செயலாளர் ஹசன் அலி செயலாளர் பதவியிலிருந்து எதற்காக வெளியேற்றப்பட்டார் என்பதை பற்றிய தெளிவான விளக்கம் முஸ்லிம் காங்கிரசின் உண்மையான போராளிகளுக்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் மிக முக்கிய தேவையாக இருந்து கொண்டிருக்கின்றது.

அந்த வகையிலே மர்ஹும் பெரும் தலைவர் அஸ்ரபிற்கு பிற்பாடு அம்பாறை மாவட்டத்து முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் மனதில் மட்டுமல்லாது ஒட்டு மொத்த கிழக்கு மாகாண காங்கிரஸ் போராளிகளின் மனதிலும் இன்று வரைக்கும் இடம் பிடித்துள்ள முன்னாள் செயலாளர் ஹசன் அலியினால் 03.03.2017 வெள்ளிக்கிழமை மாலை நிந்தவூரில் ஏற்பாடு செய்துள்ள முஸ்லிம் காங்கிரசின் தலைமையான ரவூப் ஹக்கீமின் சர்வதிகார போக்கினை கொண்ட செயற்பாடுகளை மக்களுக்கு தெளிவுபடுத்தும் பொதுக்கூட்டத்திற்கு அம்பாறை மாவட்டத்து போராளிகள் மட்டுமல்லாது கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளும் கலந்து கொள்ளுமாறு நாபீர் பெளண்டேசன் அழைப்பு விடுப்பதாக பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் பொறியலாளர் அல்ஹாஜ் நாபீர் தெரிவிகின்றார்.

மேலும் குறித்த முஸ்லிம் காங்கிரசின் தலைமைக்கு எதிராக நிந்தவூரில் இடம் பெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் நாபீர் பெளண்டேசசின் விரிவான கருத்துக்கள் அடங்கிய காணொளி இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.