ஹக்கீமுக்கு அவரின் பாதங்களை நக்கி குட்டி நாயாய் வாலை ஆட்டும் ஒரு செயலாளர் தேவை

பேராளர் மாநாட்டிற்கு முன்னர் பஷீர் ஷேகு தாவூத் அவர்கள் ஏதாவது ஒன்றையாவது அல்லது ஒரு பகுதியையாவது வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பும், அத்தோடு பஷீரின் இடத்தை எவர் நிரப்பப்போகிறார் என்ற ஆர்வமும் எல்லோருக்குள்ளும் இருக்கிறது.அவர் எதனையும் பேராளர் மாநாட்டிற்கு முன்னர் வெளியிடாது போனால் அவரின் கையில் எந்தச் சரக்கும் இல்லை அவர் பொய் சொல்கிறார் என்று அவர் மீது சேற்றை வாரி இறைக்கவும் ஒரு பெரிய போராளிக் கூட்டம் காத்துக்கிடக்கிறது.இதை அவர் வெளியிட்டால் அதை வைத்து அரசியல் செய்ய சில முஸ்லீம் அரசியல் வாதிகளும்,பேரின வாத சக்திகளும் ஆந்தைக் கண்களை அகல விரித்துக் கொண்டு,மோப்ப மூக்குகளை உறுஞ்சிக்கொண்டு காத்துக்கிடக்கிறார்கள்.

காங்கிறஸ் என்பது எம்மவர்களுக்கு ஒரு போதை.காங்கிறஸ் என்ற போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள்தான் எம்மவர்கள்.அவர்களின் சிந்தனைகளையெல்லாம் காங்கிறஸ் எனும் போதையின் புகை மேகமாய்ப் படர்ந்திருக்கிறது.இப்படிப்பட்ட காங்கிறஸ் என்ற போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை ஒரே இரவில்,ஒரு போட்டோவில்,ஒரு வீடியோவில் திருத்தவே முடியாது.

ஒரு வீடியோ சிடி பார்த்துத் தன் தலைவனைக் கைவிடும் நிலையில் காங்கிறஸ் ஆதரவாளர்கள் இல்லை.ரத்தம்,சதை,நாடி நரம்பு,புத்தி அனைத்திலும் காங்கிறஸ் போதை கலந்திருக்கும் ஒரு சமூகத்தில், ஒரு சமூக,சிந்தனை மாற்றத்தை ஒரு நள்ளிரவில் மாற்ற முடியும் என்று நினைப்பது அரசியல் அறிவும் தூர நோக்கும் அற்ற ஆர்வக்கோளாறாகத்தான் இருக்கும்.இன்று ஒரு வீடியோ வந்ததோடு இரண்டு வாரங்களுக்கு காங்கிறஸ் காட்டில் சலசலப்புக்கேட்கும்.பின்னர் அது அடங்கிவிடும்.அதன் தலைவர் கண்களைக் கசக்கிக்கொண்டு வந்து இரண்டு வார்த்தைகள் பேசினால் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்வார்கள் அதன் போராளிகள்.இதனை காங்கிறசில் பழம் தின்று விதை நட்ட பஷீர் அறியாதவராக இருக்க முடியாது.நன்றாகப் படித்த எனது நண்பர் ஒருவர் கூட ‘அரசியல் தலைவர் என்றால் அப்பிடி இப்பிடி இருப்பார்தான்.அது மிகவும் சாதாரணம்’ என்று சொல்கிறார் என்றால் ஒரு படிக்காத பாமரனின் மன நிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப்பார்க்கிறேன்.இப்படிப்பட்ட அரசியல் சிந்தனை கொண்ட சமூகத்தைத்தான் காங்கிறஸ் எமது பிரதேசத்தில் உருவாக்கி இருக்கிறது.இந்த பிடி சாபத்தில் இருந்து விமோசனம் பெறுவது ஒரு நள்ளிரவோடு நடப்பது அல்ல என்ற நிதர்சனத்தை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

அது மட்டும் அல்ல,காங்கிறஸ் எமது சமூகத்திற்குப் பொருத்தமற்றது என்பதற்கு அதன் தலைவர் விபச்சாரம் செய்கிறார் என்பது ஒரு மிகவும் மிகவும் சிறிய காரணம் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.அஷ்ரபுக்குப் பின்னரான காங்கிறஸ் இதுவரைக்கும் எமது சமூகத்திற்கு இழைத்து வந்த அநீதிகளின் பட்டியலில் தலைவரின் லீலைகள் ஒரு சின்னக் காரணம் மட்டுமே .இதை விடப் பயங்கரமான முஸ்லீம்களின் இருத்தலையே கேள்விக்குட்படுத்தும் அரசியல் பிழைகளை காங்கிறஸ் இழைத்துள்ளதை ஒவ்வொரு போராளிக்கும் நாம் உணர்த்த வேண்டும்.

காங்கிறஸ் என்ற பட்ட மரத்தை பசளையிட்டு எண்ணெய் அடித்து மீண்டும் கனிதரும் மரமாக மாற்ற வேண்டும் அல்லது இந்த மரத்தை வேரோடு பிடுங்கி வீசிவிட்டு அவ்வெற்றிடத்தில் ஒரு அழகிய ஆன்மீகப்பட்டை உரிக்கக்கூடிய ஒரு ‘கறுவா’ மரத்தை நடவேண்டும்.நான் இரண்டாம் கருத்தில் இருப்பவன்.எமது பாதை இரவோடு முடிந்துபோகும் சத்திரப் பயணம் அல்ல.நிலவையும் தாண்டிப்போகும் சரித்திரப்பயணம்.மிகப்பெரிய பொறுமை அவசியம்.

பஷீர் ஷேகு தாவூதின் எண்ணம் உண்மையிலேயே கட்சியையும் சமூகத்தையும் சுத்தம் செய்வதுதான் என்றால் அதை நிறைவேற்ற அவருக்கு நீண்ட காலமெடுக்கும்.சமூக சாக்கடையை சுத்தம் செய்யும் சக்கிலியனாக அவர் மாறவேண்டும்.அவர் சமூக சாக்கடையினால் துர் நாற்றம் வீசுவார்.அவர் எண்ணங்கள் சரியாக இருந்தால் அவரை எரித்துத்தான் காங்கிறசைப் புடம் போட வேண்டியும் வரும்.தான் சொல்வது உண்மை என்பதை நிரூபிக்க அவர் ஒரு சில ஆதாரங்களைக் காட்ட வேண்டும்.இல்லாவிட்டால் வெற்றுக்காற்றில் புல்லாங்குழல் ஊத நினைக்கும் கதையாக இது போய்விடும்.இது வரைக்கும் அவரிடம் எதுவும் இல்லை என்று யாரும் மறுக்கவே இல்லை.எல்லோரும் சேர்ந்து செய்த தவறை வெளியில் சொல்வது துரோகம் என்ற தோரணைதான் எல்லோர் வாயிலும் வெளிப்படுகிறது.தங்கள் குற்றங்கள் வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் அவர்கள் நடுங்கிக் கொண்டிருப்பதும் பஷீரோடு பேரம் பேச முனைவதுமாக அவர்களின் இந்த நாட்கள் நகர்ந்துகொண்டிருக்கின்றன.அதே நேரம் பேராளர் மாநாட்டிற்கு முன்னர் இந்த வீடியோக்கள் வெளியிடப்படுமாக இருந்தால் மாநாட்டைக் குழப்புவதற்காகத்தான் பஷீர் செய்கிறார் என்று காங்கிறஸ்காரர்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.அது பஷீருக்கு எதிராக ஒரு பெரிய எதிர்வலையை உருவாக்கிவிடும்.அந்த எதிர்வலையின் வீச்சில் உண்மைகள் புதைந்து போய்விடும்.

ஹக்கீமுக்கு அவரின் பாதங்களை நக்கி குட்டி நாயாய் வாலை ஆட்டும் ஒரு செயலாளர் தேவை.அது ஹஸன் அலி அல்ல.ஹசன் அலியை அப்புறப்படுத்தவும் முடியாது.புதிய தவிசாளர் கிழக்கிற்கு வெளியில் இருக்கவும் கூடாது.இந்தப் பேராளர் மாநாட்டில் ஹஸன் அலிக்கு பதவி உயர்வு கொடுப்பது போன்ற ஒரு மாயையைகாட்டி அவரை தவிசாளராக்கிவிட்டு செயளாருக்கு இன்னும் ஒரு கொத்தடிமையை ஹக்கீம் நியமிக்கலாம்.அது பெரும்பாலும் ‘முழக்கம் மஜீதாக’ வோ அல்லது நிஸாம் காரியப்பராகவோ இருக்கலாம்.சில நேரம், மஜீதுக்கு அல்லது காரியப்பருக்கு தவிசாளர் பதவி கொடுக்கப்படலாம்.இது எங்கள் கணிப்பு மாத்திரமே.பொறுத்திருந்து பார்ப்போம்.

எமது பயணம் நெருங்கி முட்களால் நிறைந்த நீண்ட பயணம்.

RAAZI MUHAMMEDH JAABEER