தேர்தல் என்­பது ஒரு விளை­யாட்­டாகும், விளை­யாட்டுப் போட்­டியை நடத்­து­வ­தற்கு தே.ஆணைக்­குழு தயார் ­

எல்லை நிர்­ணய அறிக்கை வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்­டதன் பின்பு தேர்­தலை நடத்­து­வ­தற்கு 90 நாட்கள் தேவைப்­படும். அநே­க­மாக ஜூன் மாதத்தில் தேர்­தலை நடத்த முடியும்.

2016 ஆம் ஆண்டின் வாக்­காளர் இடாப்பின்படியே தேர்தல் நடை­பெறும்.  

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடத்தும் பணி­க­ளுக்கு அனைத்துக் கட்­சி­களின் பிர­தி­நி­தி­களும், தலை­வர்­களும் ஒத்­து­ழைப்பு நல்க வேண்டும்  என தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார்.

தேர்­தல்கள் திணைக்­க­ளத்தில் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்ததேசப்­பி­ரி­ய­வுக்கும், மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வுக்கும் இடையில் நேற்று நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லை­ய­டுத்து ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரி­விக்­கையில்; 
எல்லை நிர்­ணய முறைப்­பாட்டு விசா­ர­ணைக்­கு­ழுவின் அறிக்­கையின் ஒரு பகுதி இன்று வியா­ழக்­கி­ழமை அர­சாங்க வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­படும். எஞ்­சிய பகு­திகள் அனைத்தும் பிர­சு­ரத்­துக்­காக எதிர்­வரும் புதன்­கி­ழ­மைக்கு முன்பு அர­சாங்க அச்­ச­கத்­துக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளது 

எதிர்­வரும் 21 ஆம் திகதி அதி­க­ரிக்­கப்­பட்­டுள்ள வட்­டா­ரங்கள் தொடர்­பி­லான விப­ரங்­களை வர்த்­த­மா­னியில் வெளி­யி­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மாகா­ண ­சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சின் செய­லாளர் மேற்­கொண்­டுள்ளார்.  

தேர்தல் என்­பது ஒரு விளை­யாட்­டாகும். விளை­யாட்டுப் போட்­டியை நடத்­து­வ­தற்கு தேர்­தல்கள் ஆணைக்­குழு தயா­ராக இருக்­கி­றது. ஆனால் விளை­யாட்டு மைதா­னத்தை தயார்­ப­டுத்­து­வது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும்.

மைதா­னத்தை எம்­மிடம் கைய­ளிக்கும் வரை தேர்தல் எனும் விளை­யாட்டுப் போட்­டியை நடத்த முடி­யாது.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை நடத்­து­வ­தற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாகாண சபைத்தேர்தலுக்காகவும் அரசாங்கம் பணம் ஒதுக்கத் தயாராகவுள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை என்று சிலர் குற்றம் சுமத்துவது தவறானதாகும் என்றார்.