நாமலின் நண்பர்களை கைது செய்ய இன்டர்போல் பிடியாணை பிறப்பித்துள்ள நீதவான்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் தொடர்புடைய இருவரை கைது செய்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் இன்று இன்டர்போல் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் போது ஹெலோகோப் நிறுவனம் கொள்வனவு செய்யப்பட்டதில், மேற்கொள்ளப்பட்ட பணம் தூய்மையாக்கல் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ உட்பட ஐவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்படாமல் வெளிநாட்டில் உள்ள இரண்டு சந்தேக நபர்களை கைது செய்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் இன்று இன்டர்போல் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

இந்திக பிரபாத் கருணாஜீவ மற்றும் இரேஷா சில்வா என்ற சந்தேக நபர்களை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் டிரோஸ்கி இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார்.

அத்துடன் இந்த வழக்கினை எதிர்வலும் ஜுன் மாதம் ஐந்தாம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

அந்த வழக்கு தொடர்பில் விரைவில் உயர் நீதிமன்றில் அதிக குற்றச்சாட்டுடன் தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபர் எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.