2017 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் 20-ம் தேதி நடைபெறும்-பி.சி.சி.ஐ அறிவிப்பு

உலகம் முழுக்க பிரபலமான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகின் முன்னனி நட்சத்திர வீரர்களும் பங்கு பெறும் இந்த தொடரானது, பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாதது.
2017-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இத்தொடரில், பங்கேற்கும் அணிகளில் விளையாட இருக்கும் வீரர்களுக்கான ஏலம் வரும் 20-ம் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை பி.சி.சி.ஐ இன்று வெளியிட்டுள்ளது.
தற்போதைய நிலையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் வீரர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. எனவே, முன்னனி அணிகள், அவ்வகை வீரர்களை விலை அதிகமாகக் கொடுத்து ஏலம் எடுக்க தயாராகவே உள்ளனர்.