முதன் முறையாக தமிழில் மாற்றியமைத்த நாட்டின் பிரதான சட்டதிட்டங்கள் பிரதமர் கையில்..

முதன் முறையாக நாட்டின் பிரதான சட்டதிட்டங்களை தமிழில் மாற்றியமைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் வைத்து மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்டகோவைகளில் முதல் பகுதிகளை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தார்.

இது குறித்து தெரியவருவதாவது,

நாட்டின் நீதிமன்ற கட்டமைப்புக்குள் ரோமன் டச்சு சட்டம் மற்றும் ஆங்கிலேயச் சட்டம் என்பன உள்ளடங்கியுள்ளன.

நீதியை நிலைநாட்டும் பணியை செய்யும் நீதிமன்றத்தின் சட்டதிட்டங்கள் பலவும் ஆங்கில மொழியிலேயே வகுக்கப்பட்டுள்ளன

இதனால் பொதுமக்கள் சட்டத்தினை அறிந்து கொள்வதிலும் நீதித்துறையின் வளர்ச்சிக்கும் நெருக்கடியாகவும் அமைந்திருந்தது.

இந்நிலையில் சுலபமாக சட்திட்டங்களை கற்று அறிந்து கொள்ளும் வகையில் நாட்டின் கோவையில் உள்ள பிரதான சட்ட திட்டங்களை தமிழ் வடிவத்திற்கு மாற்றியமைத்து பிரபல தமிழ் மொழிபெயர்ப்பாளர்களை கொண்டு கோவையாக்கியுள்ளதாக நீதி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நாட்டின் சட்டதிட்டங்கள் தமிழில் மொழி மாற்றம் செய்து பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.