பிரித்தானிய மகாராணி , இலங்கை ஜனாதிபதிக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்

பிரித்தானிய மகாராணி எலிசபெத் , இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டே இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.

இலங்கை வாழ் மக்கள் இந்த சுதந்திர தினத்தில் மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் வாழ வேண்டும் என மகாராணி எலிசபெத் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

133 வருட காலனித்துவ ஆட்சியின் பின்னர், பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி சுதந்திரம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.