அமைச்சர் பைசர் முஸ்தாபாவினால் 24 உள்ளுராட்சி சபைகளுக்கு மெசின்கள் வழங்கி வைப்பு

அஷ்ரப் ஏ .ச மத்

மாகாணசபைகள் உள்ளுராட்சி அமைச்சர்  பைசர்  முஸ்தாபா  24 உள்ளுராட்சி சபைகளுக்கு தண்னீர்  பவுசர்  மெசின்கள், மற்றும் 08 உள்ராட்சி சபைகளுக்கு கழிவு அகற்றும் மெசின்களும் நேற்று கொழும்பு விகாரமாகதேவி பாக்கில் வைத்து உள்ளுராட்சி சபைகளது அணையாளர்களிடம்  வழங்கி வைக்கப்பட்டது.
 
இவ் மெசின்கள் குருநாகல், புத்தளம், பதுளை, மொரணகாலை, அநுராதபுரம், பொலநருவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி. முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, மாத்தறை ஹம்பாந்தோட்டை போன்ற உள்ளுராடச்சி சபைகளுக்கும்,  கழிவு அகற்றும் இயந்திரங்கள், குண்டகசாலை, பேருவளை, தலவாக்கலை, அம்பாறை, நாத்தாண்டிய,  வெலிகம, சிலாபம், தெஹிர்யேவிட்ட . ஆகியவற்றுக்கு அமைச்சர்  பைசர் முஸ்தபவினால் பகிர்ந்தளிக்கப்பட்ட்டன.