மகிந்த ராஜபக்சவை விட மேர்வின் சில்வா சிறந்தவர் என்கிறார் சரத் பொன்சேகா

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சிறந்தவர் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ரஞ்சன் ராமநாயக்கவை விட மேர்வின் சில்வா சிறந்தவர் எனக் கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவிட மேர்வின் சில்வா சிறந்தவர். நாட்டை ஆட்சி செய்ததாக கூறும் ஒருவர் தவறு செய்பவர்களை அவரை விட இவர் சிறந்தவர் என்று கதைகளை கூறுவது பொருத்தமற்றது.

அந்த இடத்திலும் முன்னாள் ஆட்சியாளர் சேறுபூசவே பார்க்கின்றார். மற்றவர்கள் தவறானவர்கள். தமது கையாட்கள் சிறந்தவர்கள் எனக் கூறி அரசியல் செய்து வருகிறார் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.