இலங்கை -தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஆரம்பம்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது. 

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது. 

இதேவேளை நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் போட்டி தொடருக்கான இலங்கை அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த சந்துன் வீரக்கொடி மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகிய இருவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

இவர்களுக்குப் பதிலாக சத்துரங்க டி சில்வா மற்றும் சச்சித் பத்திரண ஆகிய இருவரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.