பாடசாலை நூற்றாண்டு விழாக்களுக்கு இனி வரும் காலங்களில் தபால் முத்திரை வெளியிடப்படாது:ஜனாதிபதி அறிவிப்பு

பாடசாலை நூற்றாண்டு விழாக்களுக்கு இனி வரும் காலங்களில் தபால் முத்திரை வெளியிடப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு விசாகா கல்லூரிக்கு நூறு ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்றிருந்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய போது ஜனாதிபதி, இனி வரும் காலங்களில் பாடசாலை நூற்றாண்டு விழாக்களுக்கு தபால் முத்திரை வெளியிடப்படாது என குறிப்பிட்டுள்ளார்.

விசாகா கல்லூரி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று தபால் தலை வெளியிபட்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் பாடசாலை நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தபால் தலை வெளியிடப்படும் இறுதி பாடசாலையாக விசாகா கல்லூரி அமையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.