சல்மான் 2 ஆம் திக­திக்கு முன்பு தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­யாது விட்டால் …..

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்பு, நகர திட்­ட­மிடல் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் கட்­சியின் செய­லாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலிக்கு தேசியப் பட்­டியல் எம்.பி. பதவி வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்­தி­ருந்­தாலும் தற்­போது பதவி வகிக்கும் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.எம். சல்மான் இது­வரை தனது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­ய­வில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.எம். சல்மான் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­தாலே ஹசன் அலிக்கு அப் பத­வியை வழங்க முடியும் என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும். சல்மான் தான் தனது எம்.பி. பத­வியை இரா­ஜி­னாமா செய்­வ­தாக பாரா­ளு­மன்ற செய­லா­ள­ருக்கு கடிதம் மூலம் அறி­விக்க வேண்டும் என்­பதே நடை­மு­றை­யாகும்.

இதே­வேளை முஸ்லிம் காங்­கி­ரஸின் உயர்­பீட கூட்டம் எதிர்­வரும் ஜன­வரி 2 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. எதிர்­வரும் 2 ஆம் திக­திக்கு முன்பு சல்மான் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­யாது விட்டால் அது தொடர்பில் கட்சியின் உயர்பீட கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

ARA.Fareel