கரந்தெனிய தொகுதி அமைப்பாளர் குணரத்ன வீரகோன் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கரந்தெனிய தொகுதி அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்ய தான் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பின் முன்னாள் அமைச்சர் குணரத்ன வீரகோன் தெரிவித்துள்ளார். 

கடந்த வருட பொதுத் தேர்தலில் தான் தோல்வியடைந்தமையினாலேயே இந்த தீர்மானத்தைமுன்னெடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறுதெரிவித்துள்ளார். 

தேர்தலில் தோல்வியுற்றமையினால் தனது கடமைகளை சரிவர செய்ய முடியவில்லை. 

எனவேகரந்தெனிய தொகுதி அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்ய தான் தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார்.