அரசியல்வாதிகளின் தேவைக்கு ஏற்ப மாறி விடாதீர்கள்: இராணுவத்தினரிடம் ஜனாதிபதி…

 

அரசியல் வாதிகளிடம் இணைந்து விடாதீர்கள் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என ஜனாதிபதி இலங்கை இராணுவத்தினரிடம் விஷேட அறிவிப்பினை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் இராணுவ அமைப்புடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் எந்த வகையிலும் நான் இராணுவத்தினரை விட்டுக் கொடுக்க மாட்டேன். அதற்கான அதிகாரம் என் கையிலேயே உள்ளது.

அண்மையில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டு அப்பாவி இராணுவத்தினரை அதிகாரங்களை மீறச் செய்ததன் பின்னணி என்ன? அதனாலேயே பிரச்சினைகள் ஏற்பட்டன.

அதன்காரணமாக நான் விஷேடமாக இராணுவத்தினரிடம் வேண்டுவது என்ன வென்றால் அரசியல்வாதிகளின் தேவைக்கு ஏற்ப மாறி விடாதீர்கள்.

எந்த பிரச்சினையானக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.