போதை மாத்திரைகளுடன் பிரயாணி ஒருவர் கைது !

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கிரான் பிரதேசத்தில் வைத்து போதை மாத்திரைகளுடன் பிரயாணி ஒருவர் இன்று (19.12.2016) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஹேரத் தெரிவித்தார்.

 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அண்மைக்காலமாக போதைவஸ்து பாவனை அதிகரித்து காணப்படுவதையடுத்து போதைவஸ்து பாவனையை இல்லாதொழிக்கும் நோக்கில் வாழைச்சேனை பொலிஸார் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து வருகின்றனர்.

 

கல்முனை பிரதேசத்தில இருந்து ஓட்டமாவடி பிரதேசத்திற்கு இளைஞர் ஒருவர் போதை மாத்திரைகளுடன் வருகின்றார் என்று பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த இளைஞர் பிரயாணம் செய்த பஸ்சை கிரான் சந்தியில் வைத்து பரிசோதனை செய்த போதே குறித்த சந்தேக நபரிடம் இருந்து 800 போதை மாத்திரைகளும் கஞ்சா 100மில்லி கிராமும் கைப்பற்றப்பட்டதுடன் குறித்த சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஹேரத் தெரிவித்தார்.
சந்தேக நபருடன் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் இன்னும் பலர் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.