முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் !

அமைச்சின் ஊடகப்பிரிவு

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று காலை – (19.12.2016) அதன் இணைத் தலைவர்களான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் சிவமோகன், திருமதி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவுக்கச்சேரியில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள், மற்றும் சமூக நல நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். முல்லைத்தீவு மாவட்ட மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் இங்கு ஆராயப்பட்டு சில பிரச்சினைகளுக்கு உடன் தீர்வுகளும் பெறப்பட்டன.