பல் வைத்தியர்களின் கருத்தரங்கு

02
அனா

இலங்கை பல் வைத்தியர் சங்கத்தின் கிழக்கு மாகாண கிளையினால் மூன்றாவது முiறாக ஏற்பாடு செய்யப்பட்ட நவீன உலகில் புதிய சவால்களுக்கு பல் வைத்தியர்கள் முகம் கொடுத்தல் தொடர்பான செயலமர்வு பாசிக்குடா அமாயா பீச் ஹோட்டலில் நேற்று (10.12.2016) இரவு இடம் பெற்றது.

05

பல் வைத்தியர்கள் சங்கத்தின் கிழக்கு மாகாண கிளையின் தலைவர் டாக்டர் கே.முரளீதரன் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஜே.டபள்யூ.ஜயசுந்தர பண்டார கலந்து கொண்டதுடன் அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக வைத்துறை பீடாதிபதி டாக்டர் திருமதி அஞ்சளா அருள் பிரகாசம், கிழக்கு பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசியரியர் எஸ்.மௌனகுரு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

06

நவீன உலகில் புதிய சவால்களுக்கு பல் வைத்தியர்கள் முகம் கொடுத்தல் தொடர்பாக சுகாதார அமைச்சின் உதவி பணிப்பாளர் நாயகம் ஜே.டபள்யூ.ஜயசுந்தர பண்டார உறையாற்றியதுடன் கிழக்கு பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசியரியர் எஸ்.மௌனகுருவினால் தயாரித்து நெறியாள்கை செய்யப்பட்ட நாட்டுக்கூத்து அறங்கேற்றப்பட்டது.

10