1 மில். பெறுமதியான போலி அமெரிக்க நாணயத்தாள்களுடன் இருவர் கைது !

images

 சுமார் 1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான போலி நாணயத்தாள்களை 10 இலட்சம் ரூபாய்க்கு விநியோகிக்க முயற்சித்த சந்தேக நபர்கள் இருவரை வடமத்திய மாகாண விசேட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர், செவ்வாய்க்கிழமை(19) கைதுசெய்துள்ளனர்.

 செட்டிக்குளம் பிரதேசத்தைச் சேரந்த 34 மற்றும் 54 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் போலி பண தாள்கள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, வடமத்திய மாகாண விசேட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர், போலி பணத்தாள்களை கொள்வனவு செய்வதுபோல சென்று சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளனர்.