ஆட்சி நடத்தும் எந்தவொரு அரசாங்கமும் நாட்டின் பாதுகாப்பு குறித்து கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் !

gotabhaya-rajapakse

நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து விடயங்களும் பாதுகாப்பினை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகவும் நாட்டில் ஆட்சி நடத்தும் எந்தவொரு அரசாங்கமும் பாதுகாப்பு குறித்து கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.