மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து சிறந்த சுகாதார சேவை மக்களுக்கு வழங்கப்படும்: ராஜித

rajithaகிரமமான சுகாதார சேவையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

மொத்த சனத்தொகையில் 5000 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை இலங்கையில் உருவாக்கப்படும்.

மேலும், மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து சிறந்த சுகாதார சேவை மக்களுக்கு வழங்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.