மோசடி வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஸ விடுதலை !

திவிநெகும அபிவிருத்தி திட்ட வழக்கு தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை சட்டமா அதிபர் வாபஸ் பெற்றுள்ளார்.

basil

சட்டமா அதிபரின் ஒப்புதல் கடிதம் பெறாமலேயே குறித்த குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே குறித்த வழக்கை சட்டமா அதிபர் மீளப்பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பயணத் தடைகள் உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும் இரத்து செய்யப்பட வேண்டும் என சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

திவிநெகும அபிவிருத்தி திட்டத்தில் இடம்பெற்ற 50 இலட்ச மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.