ஜெயலலிதாவின் மறைவால் இந்திய அரசியல் அரங்கில் மிகப்பெரிய இழப்பு : பிரதமர் மோடி

தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

modi jayalalitha

இதனையடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ”ஜெயலலிதாவின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. ஜெயலலிதாவின் மறைவால் இந்திய அரசியல் அரங்கில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். 

அதேபோல் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 

மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.