முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது

தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இரவு 11.30 மணியளவில் இதயம் செயலிழந்ததன் காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து சென்னை கலைவாணர் அரங்கத்திற்கு பின்புறம் உள்ள ராஜாஜி மண்டபத்தில்  முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, சென்னையில் மூன்று நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.