இனங்களுக்கும் மதங்களுக்குமிடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் நோக்குடன் குரோதமொழிப் பிரயோகங்களை மேற்கொள்தல்

chandrika
அஷ்ரப் ஏ சமத்

எமதுநாட்டில் அண்மைக் காலங்களில் காணக்கூடியதாகஉள்ளநாளுக்குநாள் அதிகரித்துச் செல்லும் குரோதமொழிப் பிரயோகம் சம்பந்தமாகதேசியஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமானஅலுவலகத்தின் (ONUR) கவனத்திற்குக் கொண்டவரப்பட்டுள்ளது. பலதசாப்தங்களாக இரத்தம் சிந்திஏற்பட்டஅழிவுகளுக்குப் பிறகு முழு நாடும் ஒன்றாகசமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் நோக்கியபயணத்திற்கு இவ்வாறானநிகழ்வுகள் சவாலாகஅமைவதுகவலைக்குறியஒருவிடயமாகும்.

 

தமதுகுறுகியநோக்கங்களைஅடைந்துகொள்ளும் நோக்குடன் குரோதவெளிப்பாடுகள் மற்றும் செயற்பாடுகளின் மூலம் எங்களதுசகோதர இலங்கைக் பிரசைகளைஅவமானப்படுத்திஇழிவிற்குஉட்படுத்தி இன அல்லதுமதஅடிப்படையில் இலங்கைசமூகத்தினுள் பிளவைஏற்படு;த்துவதற்கான சூழலைஉருவாக்குவதற்கானஎவ்விதசந்தர்ப்பத்தையும் வழங்கமுடியாது.
முதன் முறையாகஇந்தஅரசாங்கமானதுநிலையானசமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் மூலம் ஐக்கிய இலங்கையொன்றைக் கட்டியெழுப்பும் நோக்கத்தைவெளிப்படையாகதெளிவுபடுத்தியுள்ளது. சகல இனங்களுக் கிடையேயும் நல்லிணக்கத்தைஏற்படுத்துவதுஅரசாங்கத்தின் முதன்மைநோக்கமாகும். இவ் அணுகுமுறையானது, 2015 ஆம் ஆண்டிற்குமுன்புள்ளகாலத்தில் அரசஆட்சியாளர்களினால் இனங்களுக்கிடையில் குரோதம் மற்றும் இனவாதத்தைஏற்படுத்துவதற்குஆதரவுவழங்கப்பட்டதோடுசகோதர இலங்கையர்களைதுன்புறுத்தியதற்குபொறுப்புக் கூற வேண்டியவர்களுக்குஎதிராகநடவடிக்கைமேற்கொள்ளப்படாமையானதுமுற்றுமுழுதாகவேறுபட்டஒருஅணுகுமுறையாகும்.
இலங்கைஅரசாங்கமும் நாட்டுமக்களும் ஒன்றிணைந்துநல்லாட்சியைஅடிப்படையாகக் கொண்டசமூகம் ஓன்றைத் திரும்பவும் கட்டியெழுப்புவதற்கானஉகந்தமுயற்சியில் ஈடுபட்டிருக்கும் இக்காலகட்டத்தில் சவால்கள் பலவற்றைவெற்றிகொள்ளவேண்டியுள்ளது. இதனிடையே 2015 ஆம் ஆண்டுசனவரிமாதத்தின் பின்புதிறக்கப்பட்டுள்ளசந்தர்ப்பங்களும் சாதகமானசமூக–அரசியல் நிலைமைகளும் முற்போக்காகப் பாவிக்கப்படவேண்டியுள்ளது.

 

ஒரேநாட்டவராகஎங்களுக்குச் சொந்தமாகவேண்டியஅபிவிருத்தி,பொருளாதாரமேம்பாடுமற்றும் அரசியல் ஸ்தீரத்தன்மைஎன்பவற்றைஅடைந்துகொள்வதெனில்,நாட்டுப்பற்றுள்ளசகல இலங்கைப் பிரசைகளும் ஒற்றுமையுடன் தலைமைத்துவத்தைப் பெற்றுக் கொடுத்துசமாதானம்,நல்லிணக்கம் மற்றும் மக்கள் சார்பானசெயல்திறன்மிக்கநேர்மையானஆட்சிமுறையொன்றைப் பெற்றுக் கொள்வதற்குமிகவும் அவசியமானஒன்றாகஉள்ளது.
பல்லின,பலமதங்களைக் கொண்டநாடாகிய இலங்கையில் எங்கள் ஒவ்வொருவருக்கும் இடையில் உள்ளவேற்றுமையைமதித்துஎங்களதுசெழிப்பானபன்மைத்துவத்தைபேணவேண்டும். ஒவ்வொருபிரசையினதும் உரிமைகளைஅனுபவிப்பதற்குசந்தர்ப்பம் உள்ள இலங்கையர்களாகபொதுவாகப் பெருமைப்படக் கூடிய,சமவாய்ப்புக்களைவழங்கக் கூடியமற்றும் அந்நியோன்னியகௌரவத்துடன் கூடியஒற்றுமையானஎதிர்காலத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காககுறுகிய,மத்தியகாலமற்றும் நீண்டகாலச் செயற்பாடுகள் பலதற்போதுசெயற்படுத்தப்பட்டுவருகின்றன.
அதிமேதகுசனாதிபதிமைத்திரிபாலசிறிசேன,கௌரவபிரதமர் ரணில் விக்ரமசிங்கஆகியோர்உள்ளிட்ட முழு அரசாங்கமும் குரோதமொழிப் பிரயோகம் பற்றிதங்களதுபலமானஅதிருப்தியைதெரிவித்திருப்பதோடு,அதற்கானஎவ்விதசந்தர்ப்பங்களுக்கும் இடமளிக்கப்படமாட்டாதுஎன்றுதெளிவாகக் கூறியுள்ளனர். இனங்களுக் கிடையில் பிரிவினையைஏற்படுத்துவதற்காக இனவாதமற்றும் மதவாதஅடிப்படையில் ஆத்திரமூட்டுபவர்கள் சம்பந்தமாகதாமதியாதுசட்டத்தைகடுமையாகசெயற்படுத்தவேண்டியுள்ளது.

 

வெறுப்புமற்றும் குரோதச் செயற்பாடுகளுக்காகமக்களைதூண்டுகின்றகுழுக்களின் செயற்பாடுகள் சம்பந்தமாகசிவில் சமூகம் மற்றும் மதத் தலைவர்களினால் முன்னெடுக்கப்படும் மிகவும் முற்போக்கானசெயற்பாடுகளைநாங்கள் வரவேற்கிறோம்.
மக்களிடையேகுறுகிய இனவாதகருத்துக்களைபரப்புவதற்காகமுயற்சிகள் மேற்கொள்ளும்,வெ;வேறு இனங்களைச் சேர்ந்த இருவர்கைதுசெய்யப்பட்டுள்ளதைவரவேற்பதோடு இவ்வாறானசெயற்பாடுகளுடன் தொடர்புடையநபர்களின் சமூக,அரசியல,; மதப் பிற்புலம் அல்லதுஅந்தஸ்து கருத்தில் கொள்ளப்படாதுசட்டநடவடிக்கைமேற்கொள்ளுமாறுகுறிப்பிட்டஅதிகாரிகளைகேட்டுக் கொள்கிறோம்.

 

மேலும்,கடந்தகாலங்களில் ஏற்பட்ட இவ்வாறானகுரோதகருத்துப் பிரயோகம் மற்றும் செயற்பாடுகள் சம்பந்தமாகஅதிகமுறைப்பாடுகள் வௌ;வேறுதரப்பினரால் சாட்சியங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கானபுலனாய்வுக்காகசட்டநடவடிக்கைஎடுப்பதில் ஏற்பட்டுள்ளதாமதத்தைகவனத்தில் கொண்டுவருவதற்குவிரும்புகிறோம். இந் நிகழ்வுகள் சம்பந்தமாகசட்டத்தைசெயற்படுத்தும் அதிகாரிகளினால் விரைவாகநடவடிக்கைமேற்கொள்ளப்படும் என்றுஎதிர்பார்க்கிறோம்.

 

நிலையான,மேம்பட்டபலசமூகங்களைக் கொண்ட இலங்கைதேசத்தைக் கட்டியெழுப்புவதைநோக்கிநாங்கள் அனைவரும் உறுதியுடன் மேற்கொள்ளும் இம் முயற்சிக்குதடங்கல்களைஏற்படுத்துவதற்குஎந்த இனத்தினதும் இனவாதஅல்லதுதீவிரவாதக் குழுக்களும் இடமில்லைஎன்றுஅதிமேதகுசனாதிபதியும் கௌரவபிரதமர்அவர்களும் மிகவும் தெளிவாகத் தெரிவித்துள்ள கூற்றுக்களைபாராட்டுகிறோம்;.

 

இந் நோக்கத்தைஅடைந்துகொள்வதற்கான இம் முயற்சியில் எங்களுடன் இணைந்துகொள்ளுமாறுசகல இலங்கையர்களுக்கும் அழைப்புவிடுக்கிறோம்.

சந்திரிக்காபண்டாரநாயக்காகுமாரதுங்க
தவிசாளர்
தேசியஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமானஅலுவலகம்.