துருக்கி செல்லும் பிரதி அமைச்சர் அமீர் அலி

 

துருக்கி நாட்டில் நடைபெறவிருக்கும் முதலாவது குத்தூஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்ரஸின் கெளரவ தவிசாளருமாகிய M.s.s.அமீர் அலி நாளை அதிகாலை இலங்கையில் இருந்து புறப்படுகிறார்.

ameer ali

இந் நிகழ்வானது எதிர்வரும் 29 மற்றும் 30 ம் திகதிகளில் துருக்கி நாட்டின் ஸ்தாம்புல் நகரில் நடைபெறவிருக்கிறது.300 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதி நிதிகள் கலந்து கொள்ளும் இந் மாநாட்டிற்க்கான விஷேட அழைப்பானது இலங்கையில் உள்ள சிறுபான்மை கட்சியான அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்க்கு கிடைத்திருப்பதாகவும்,அகில இலங்கை மக்கள் காங்ரஸின் கெளரவ தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாகவும் இம்மாநாட்டிற்கு துருக்கி செல்ல உள்ளதாக பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.